Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சையில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 30 பேர் வீடு திரும்பினர்

ஏப்ரல் 21, 2020 02:00

வல்லம்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள கொரோனா வார்டில் இருந்து குணமடைந்த 30 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரேனா வைரஸ் சிகிச்சை அளிப்பதற்காக தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது.

 கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நூற்றுக்கும் அதிகமானோர் அங்கு தங்க வைக்கப்பட்டனர். இதில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லூரி வார்டில் இருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

தொடர்ந்து கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் அறியப்பட்டவர்கள் சில நாட்களாக அங்கிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு வந்தனர். நேற்று ஒரே நாளில் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 42 பேரில் 30 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என அறியப்பட்டு அவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

30 பேரில் 22 பேர் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள். தற்போது 12 பேர் மட்டுமே செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரி கொரோனா வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்